வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக ‘அலெக்சாண்ட்ரின்’ கிளிகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த  விவகாரத்தில் நடிகர் ரோபோ சங்கருக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.