தமிழ் சினிமா உலகில் காதலித்து அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு அதே வேகத்தில் விவாகரத்தும் செய்து விடுகின்றார்கள். ஒரு சிலர் மட்டுமே பிரியாமல் நிலைத்து வாழ்ந்து வருகிறார்கள். அப்படி ஒரு ஜோடி தான் சினேகா பிரசன்னா. இவர்கள் திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு பின் குடும்பத்தின் சம்மதித்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். சென்ற 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதலில் விழுந்து பின் திருமணம் செய்தனர். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

இவர்களின் திருமணம் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி நடைபெற்றது. திருமண நாளில் பிரசன்னா-சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டியுள்ளார். அது எப்படி என்றால், முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பிரசன்னாவின் பிராமண முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதன்படி பிரசன்னா சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டியுள்ளார்.