திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ரமேஷ்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் மகன் உள்ளார். நேற்று முன்தினம் லதாவின் மகன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற விஷால் நித்தின்(22), பிரேம்(22) தரணி(23) ஆகிய மூன்று பேரும் குடிபோதையில் பைக்கில் வேகமாக சென்றனர். இதனை பார்த்து லதாவின் மகனும் அவரது நண்பர்களும் அந்த வாலிபர்களை கண்டித்தனர்.

இதனால் கோபமடைந்த வாலிபர்கள் 17 வயது சிறுவனையும் அவரது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு ரமேஷ் லதாவும் வெளியே ஓடிவந்த ரமேஷும், லதாவும் மகனைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி சென்றது. இதனால் படுகாயமடைந்த லதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.