மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஒருவரையொருவர் தாக்கியும் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால் பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியிருக்கிறார். ”

பாஜக நாட்டை அழித்து வருகிறது, ED போன்ற தன்னாட்சி அமைப்புகள் பாஜகவுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன.” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மம்தா முன்வைத்துள்ளார்.