பிரபல நடிகையும், மாண்டியா மக்களவை உறுப்பினருமான சுமலதா நாளை பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக அவர் தெரிவித்தார். மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியை மேம்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் கூறினார். சுமலதா கடந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.