தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான, ‘வேளாண்மை சங்கமம்- 2023’ என்ற மூன்று நாள் கண்காட்சியை, திருச்சி கேர் கல்லுாரியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது  குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை பெறுவதற்கான அவகாசம் ஆக.15ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் குறுவை சாகுபடியை ஆர்வத்துடனும், அதிகளவிலும் மேற்கொள்ள விவசாயிகளுக்கு உரம், இடுப்பொருட்கள் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இத்திட்டத்தை பெறுவதற்கான அவகாசம் நீடிக்கப்படுவதாகவும், விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.