ராஜஸ்தானில் நாளை மறுநாள் ஒரேகட்டமாக 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறயுள்ளது. மேலும் இன்று பிரசாரம் முடியவுள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கையாக பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். பாஜக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என பல வாகுறுதிகள் கொடுத்துள்ளது.

அதேபோல் ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மீண்டும் ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. வாக்குறுதிகளை வாரி வீசினாலும், மக்கள் யாருக்கு வாக்கை வீசுகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.