நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கடன் பெறுவதில் விவசாயிகள் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால் மத்திய அரசு  கடந்த வருடம் கிஷான் ரின் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலமாக விவசாயிகள் வேகமாக கடன் பெற முடியும். இதில் கடன் பெற விவசாயிகள் முதலில் ஆதார் கார்டு உதவியுடன் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் விவசாயிகளின் விவரங்கள் காட்டும். இதற்கு முன்பு கடன் பெற விவசாயிகளின் விவரங்களை உள்ளிடுவதில் சிரமம் இருந்த நிலையில் தற்போது கிசான் லோன் போர்டல் மூலம் ஆன்லைன் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. எனவே விவசாயிகள் குறைந்த நேரத்தில் எளிதில் கடன் பெறுகின்றனர்