மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 12 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையினுள் 13 ஆவது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் அல்லது ஜனவரி கடைசி வாரத்தில் 13 ஆவது தவணை பணம் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. திட்டத்தின் கீழ் பணம் பெற விரும்புவோர் ஐகேஒய்சி முறையை முடிக்க வேண்டும்.