தமிழகத்தில் குருவைப் பருவ நெல் சாகுபடி முடிந்து தற்போது சம்பா பருவ நெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 35 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ளது. ஆனால் ஆற்று பாசனத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் சாகுபடி தொடங்க முடியாமல் பல மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் போனால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்தால் இந்த இழப்பீட்டை சமாளிக்கலாம். எனவே அவர்களுக்கு பயிர் காப்பீடு கட்டாயமாக வழங்க வேண்டும் என்று வேளாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீதம் பெயர்களுக்கு காப்பீடு செய்யப்படும் நிலையில் இந்த முறை கூடுதலாக பயிர் காப்பீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு 2300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.