தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறைகள் நிறுவனங்களில் தமிழக அரசு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்குகின்றது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்ட பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் இந்த இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவை என அரசு நிர்ணயித்துள்ளது.

40 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து வருகின்ற அக்டோபர் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலமாக அல்லது நேரடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனவே விளையாட்டு வீரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.