இயற்கையான வாழ்வியலுக்குத் திரும்ப நினைக்கும் பலரும், சமையலுக்கும் குடிநீருக்கும் மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவதை மீண்டும் தொடங்கத் தொடங்கியுள்ளனர். மண் பாத்திரங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கும், வீட்டின் வாஸ்து அமைப்பிற்கும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஆனால், சந்தைக்குச் சென்று மண் பாத்திரங்களை வாங்கும் போது, சில அடிப்படை விதிகளையும் ஆன்மீக வாஸ்து நெறிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமாகும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, மண் பாத்திரங்களை வாங்குவதற்கு சில குறிப்பிட்ட நாட்கள் உகந்தவையாகக் கருதப்படுவதில்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மண் பாத்திரங்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதேபோல, மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவு வேளைகளில் மண் பாத்திரங்களை வீட்டிற்கு வாங்கி வருவதையும் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கிய ரீதியாகவும் மண் பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. கடைகளில் விற்கப்படும் சில மண் பாத்திரங்கள் பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகவும் , ரசாயன வண்ணங்கள் பூசப்பட்டும் கவர்ச்சியாகக் காட்சி அளிக்கும். இதுபோன்ற ரசாயன கலவை கொண்ட பாத்திரங்களை வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் சமைக்கும் போது ரசாயனங்கள் உணவில் கலந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
இயற்கையான முறையில் சுடப்பட்ட, எந்தவித ரசாயனப் பூச்சும் இல்லாத சாதாரண மண் பாத்திரங்களே சமையலுக்கும் குடிநீருக்கும் மிகவும் ஏற்றவை. எனவே, சரியான நாட்களில், சரியான ரசாயனமற்ற மண் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தையும், வீட்டில் வாஸ்து ரீதியான நேர்மறை ஆற்றலையும் முழுமையாகப் பெற முடியும்.
