நாம் தமிழர் கட்சியின் 2024 நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார். இதில், விளவங்கோடு இடைத் தேர்தலில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி சேவியர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

திமுக நிர்வாகிகள், தேவாலய பாதிரியாரால் சேவியர் குமார் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அடித்துப் படுகொலைச் செய்யப்பட்டார். சேவியர் குமார் நாதக நிர்வாகியும், போக்குவரத்துத்துறை ஊழியருமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.