தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினர் இடமும் கருத்து கேட்டு பின்னர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் எனவும் மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.