டாட்டா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கியது. தற்போது ஏர் இந்தியாவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் 840 விமானங்களை வாங்க டாட்டா குழுமம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஏர்பஸ், போயிங் போன்ற விமான நிறுவனங்களிடமிருந்து 740 விமானங்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் கூறியதாவது, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்படுகிறது. மீதமுள்ள 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடன் வாங்கவும் மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலாவது ஏ 350 ரக விமானம் எங்களிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த பத்து வருடங்களுக்குள் அனைத்து விமானங்களும் வந்து சேர்ந்துவிடும்.

அதேபோல் கடந்த 2005 -ஆம் ஆண்டு ஏர் இந்தியா 111 விமானங்களை வாங்க ஆர்டர் அளித்தது. பின்பு கடந்த 17 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்களை கொள்முதல் செய்வது இதுவே முதல் தடவை ஆகும். ஏர் இந்தியாவை உலக தரமான விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் இந்த விமானங்களை வாங்குகிறோம். இது மட்டுமல்லாமல் விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காகவும் rolls-royce, cfm இன்டர்நேஷனல், ஜிஈ ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.