கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு நேரு ஸ்டேடியத்தில் ராட்சத பலூன் ஒன்று கட்டப்பட்டிருந்தது. இந்த பலூனின் கயிறு அறுந்த நிலையில் காற்றில் அடித்து வரப்பட்டு மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதையில் விழுந்தது.

பலூன் விழுந்தது உடனடியாக கண்டறியப்பட்டதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று ஓடுதளத்தில் இருந்த பலூனை அப்புறப்படுத்தினர். இதனால் விமான பணிகள் தடைபடவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.