சரியானதை ஆதரிப்பதும் விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவது தான் பத்திரிக்கைக்கு இருக்கக்கூடிய தர்மம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை பத்திரிக்கையாளர்கள் ஆதரித்து எழுதுங்கள், அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கும் போது அதற்கு மரியாதை இருக்கும், விமர்சித்து மட்டுமே எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.