உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த கார் விபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் மற்றும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு அதிவேகமாக வந்த லாரி ஒன்று இவர்களது கார் மீது மோதியதில் பெருத்த சேதமடைந்தது. விபத்தில் பிரவீன் குமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதை அறிந்த சக வீரர்கள் நிம்மதி அடைந்தனர். ரசிகர்கள் பலர் நலம் விசாரித்து வருகின்றனர்