ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் வைத்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு 29 வயது நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் சிறுமியின் தந்தையிடம் இருந்து காப்பாற்றுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் நம்பி  சென்ற சிறுமியை அந்த நபர் தனது நண்பருடன் சேர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது மகளைக் காணவில்லை என்று அந்த தந்தை புகார் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மேற்குறிப்பிட்ட அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தந்தை உட்பட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.