கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது போல் இந்த முறை தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இணையதளத்தின் படி ஜூலை இரண்டாம் தேதி வரை 1.32 கோடி பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த வருடம் ஐடி ஆர் தாக்கல் செய்த 10 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெற்றனர். இதற்கு முன்னதாக தாக்கல் செய்தவர்களுக்கு இந்த படம் திரும்ப கிடைத்தது. வருமான வரி மின்னணு முறையில் சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் பணம் வங்கி கணக்கில் வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.