விபச்சார விடுதி நடத்திய வழக்கில் கன்னட நடிகர் சஞ்சு என்கிற மஞ்சுநாத் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ரகசிய தகவலின் பேரில் விநாயக் நகர் மற்றும் படரஹள்ளி பகுதிகளில் போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தி மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், அனுமேஷ், ராஜேஸ், மோகன், மஞ்சுநாத் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மஞ்சுநாத்தின் பெயர் வெளியானது. ‘லோகாண்டோ’ செயலி மூலம் இந்த மோசடி நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.