வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுறையை முன்னிட்டு நாளையும், சனிக்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுமக்கள் சிரமம் இன்று பயணிக்கும் வகையில், சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து முக்கிய ஊர்களுக்கு நாளை தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளை மறுநாள் 200 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை, கோவை, பெங்களூரு என பல நகரங்களில் இருந்து மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.