விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி சென்னையில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான நாளை செப்டம்பர் 18ஆம் தேதி பொது விடுமுறை ஆக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பொது விடுமுறை நாட்களில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

எனவே நாளை சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் சென்ட்ரல்- அரக்கோணம் , சென்ட்ரல் – சூலூர் பேட்டை,  சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் துரித மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.