மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பக் காலக்கெடுவை மீண்டும்
தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. இதனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீட்டிக்க தேசிய தேர்வு முகமை சமீபத்தில் முடிவு செய்துள்ளது. தகுதியானவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு மார்ச் 11 முதல் 28 வரை நடைபெறும்.