ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் தனது ‘X’ தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “இந்த அணியைப் பற்றி நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

தொடர்ந்து போராடுவோம்” என கூறியுள்ளார். ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து இருந்த அம்பானி குடும்பத்திற்கு தொடர் தோல்விகள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.