விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லை என நடிகை சமந்தா ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றுக் கொண்டார். சமந்தா அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடிக்க கமிட்டானார். இதற்கிடையில் அவர் எதிர்பாக்காத சூழலில் மயோசிட்டிஸ் நோய் தாக்கியது .

இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் தற்போது அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவோடு குஷி படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், “விஜய் தேவரகொண்டாவை பார்க்கும் போது எல்லாருக்கும் அவர் ரவுடி மாதிரியும், யாருக்கும் அடங்க மாட்டார் போலவும் இருக்கும். நானும் அவரை அப்படி தான் நினைத்தேன். ஆனால், உண்மையை சொல்லப்போனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.