விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது “பிச்சைக்காரன்-2” படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் இருக்கிறார். இப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகிபாபு உட்பட பலர் நடித்து உள்ளனர். இத்திரைப்ப்படம் சென்ற 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதோடு பிச்சைக்காரன் -2 படம் வெளியான 3 நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிச்சைக்காரன் 3-ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் பிச்சைக்காரன்-3 படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இந்த பாகத்தின் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்தில் இருக்கும் எனவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள்  மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.