சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பாஜக அரசு நேற்று அறிவித்த நிலையில்  சிஏஏ சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், சிஏஏவை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில், விஜய்யின் கோரிக்கையை ஏற்றுதான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.