பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையி, இதனை எதிர்த்து நாளை முதல் மார்ச் 19ஆம் தேதி வரை பாஜக சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடத்தப்படும்.

பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அதில் வரக்கூடிய பொருட்களை முழுமையாக பயன்படுத்தினால் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமானம் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.