விஜயகாந்த் உயிரிழந்த துக்கம் தாங்காமல் அவரது ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் ஆண்டி (45). இவர் தேமுதிகவின் கொட்டாம்பட்டி ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்திருக்கிறார். விஜயகாந்த் இறந்தநாள் முதல் சோகமாகவே இருந்த இவர், நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்திருக்கின்றனர்.