வங்க கடல் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதனால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைடுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. வங்காளவிகுடா, மன்னர் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் 40 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும் என்பதனால் அப்போது சுழல் காற்றும்.

எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சுமார் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சொல்லவில்லை..