தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் முன்னணி சமூக வலைத்தளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கணக்கு தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அவர், நண்பர்களுக்கு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், இன்று முதல் கட்சி ரீதியான அறிவிப்புகளும் மக்களுக்கான செய்திகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்தடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.