தேமுதிக  தலைவர் விஜயகாந்த் இருமல் மற்றும் சளி தொல்லை காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை மியாமட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜயகாந்த் ஐஸ்யூவில் இருந்தாலும் உடல்நிலை சீராக உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கேப்டனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது. அவரின் உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நம்ப வேண்டாம். மருத்துவமனையில் இருந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.