நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், கேப்டன் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்தின் மறைவு பேரிழப்பாகும். திரை வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். அவரது உடலுக்கு அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.