காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த வாரம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் சிறிது நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக முதலமைச்சர்  முக ஸ்டாலின் , அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருந்தனர்.