சமூக வலைத்தளமான X-ல் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, மனிதர்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் விலங்குகளின் மீது காட்டப்படும் கொடூரத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது. இரண்டு காளைகள் ஒரு மாட்டு வண்டியை இழுக்க முடியாமல் இழுத்துச் செல்கின்றன. அந்த வண்டியில் ஏற்றப்பட்டுள்ள பாரமோ, அந்த மாடுகளின் உடல் பலத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. பாரம் தாங்காமல் காளைகளின் கால்கள் நடுங்குவதையும், உடல் தளர்வதையும் கண்டும் சற்றும் இரக்கமின்றி, அதன் உரிமையாளர் அவற்றை அடித்து வற்புறுத்துவது பார்ப்பவர் நெஞ்சைப் பிசைகிறது.
I understand that for many people animals are a source of earning they are used for loading, transport, and daily work. But why can’t there be even a little consideration for their pain and suffering?
They are living beings. They feel exhausted. They feel fear. They feel pain.… pic.twitter.com/rmHMb4JjO2
— Vidit Sharma 🇮🇳 (@TheViditsharma) January 11, 2026
தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகலாக உழைக்கும் இந்த ஊமை ஜீவன்களுக்கு, உணவும் நீரும் கொடுப்பதைத் தாண்டி, ஒரு துளி அன்பையும் மனிதாபிமானத்தையும் கூடவா நம்மால் காட்ட முடியாது? தங்களால் பேச முடியாது என்ற ஒரே காரணத்திற்காக, அவை படும் வலியை நாம் அலட்சியப்படுத்துவது எவ்வளவு பெரிய துரோகம்? “விலங்குகளும் உயிர் உள்ளவை, அவற்றுக்கும் வலிக்கும், பயம் வரும்” என்பதை மறந்துவிட்டுச் செயல்படும் இத்தகைய மனிதர்களின் செயல், சமூக வலைதளங்களில் பலரது கண்டனங்களைப் பெற்று வருகிறது. இந்த வாயில்லா ஜீவன்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
