நிவாரண நிதி வழங்க ஏதுவாக வெள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் துரிதப்படுத்த வேண்டும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வெள்ள சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்றும் தேவையான ஆவணங்கள் இல்லாத மக்கள் புகைப்படம் எடுத்து whatsapp மூலம் விஏஓ ஊராட்சியில் செயலாளர்களிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.