வாடகைத்தாய் முறை விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற விரும்புபவர்கள் பெண்ணின் கருமுட்டை மற்றும் ஆணின் உயிரணுவை கொண்டிருக்க வேண்டும் என்ற விதி பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது புதிய விதியின் படி, இரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு மட்டுமே குறை உள்ளது என மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இதற்கு சான்று பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.