தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரேபிடோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு கடமைக்கான சவாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. ரேபிடோ செயலியில் பைக் டாக்ஸி புக் செய்து VOTE NOW என்ற கோடை பயன்படுத்தினால் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம்.