புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிமீ வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் நெரிசல் மிகுந்த சாலைகளை கடக்கையில் அதிவேகத்துடன் செல்ல முற்படுகின்றனர். இதனால் அவ்வப்போது பெரும் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்த போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்க புதுச்சேரி காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.