இப்போது டிஆர்பி ரேட்டிங்கில் தமிழ் சின்னத் திரையில் முதலிடத்தில் இருப்பது கயல் சீரியல் தான். அதில் கயல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

அண்மையில் சைத்ரா ரெட்டி தன் அம்மா உடன் நகை கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது அவருக்கு 3-வதாக காதணி போடலாம் என அம்மா கூற அவரும் ஒப்புக்கொண்டாராம். இதனிடையே காது குத்தும்போது சைத்ரா ரெட்டி வலியால் துடிக்கும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.