ஆந்திர மாநிலத்தில் ஜூலை மாதம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய ஊதியம் திருத்தம் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அடுத்த ஊதிய திருத்தத்தின் பொழுது தொழிலாளர்களுக்கு டிஏ நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் இதுகுறித்து அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அரசு ஆலோசகர் அரசு தொழிலாளர்களின் குறைகள் மீது அக்கரையாக அரசு இருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை எனும் தெரிவித்தா.ர் மேலும் அங்கன்வாடி ஊழியர்களின் 10 கோரிக்கைகளில் ஒன்பது கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தற்போது சம்பள உயர்வு செய்ய முடியாது என்பதால் ஜூலை மாதம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.