அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் அன்று நடைபெறும் நிகழ்ச்சிகளை 40 கேமராக்களை கொண்டு 4K தொழில்நுட்ப மூலம் தூர்தர்ஷன் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ஜி-20 மாநாடு 4k தொழில்நுட்பத்தில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.