மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆடுகளை வாங்குவதற்கு முயன்ற போது 93,295 ரூபாய் இழந்ததாக கூறப்படுகின்றது. மொபைல் கடை நடத்தி வரும் முகமது குரேஷி என்பவர் ஆடு வாங்குவதற்காக இணையத்தில் தேடி உள்ளார். அப்போது ராயல் ஆடு பண்ணையை சேர்ந்த அஷ்ரப் குரேஷி என்ற பெயரில் whatsapp செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது.

அதில் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து தனக்கு பிடித்த ஆடுகளை தேர்ந்தெடுத்தார். இதன் விலை 86 ஆயிரத்து 695 ரூபாய் என இருந்தது. இதனை முகமது குரேஷிக்கு வழங்க 6600 பயண செலவு கேட்கப்பட்டுள்ளது. ஆட்டை அனுப்பும் முன்பு முழு தொகையையும் கொடுக்க வேண்டும் என முகமது குரேஷியிடம் கேட்கப்பட்ட நிலையில் ஜனவரி 2ஆம் தேதி குரேஷி google pay மூலமாக பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர் ஆடுகளை அனுப்பாமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.