சென்ற ஞாயிற்றுக்கிழமை தன் சமூகவலைதளப்பக்கத்தில் மஞ்சள் சட்டை மற்றும் டரவுசர் அணிந்திருந்த ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போட்டோவை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார்.  அதோடு அப்பதிவில் “நன்றி நண்பரே. தீர்க்க முடியாத மும்பை போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் குறித்த நேரத்தில் சூட்டிங்கிற்கு அழைத்து சென்றதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். மும்பை காவல்துறையினரை மறைமுகமாக சாடும் விதமாக இப்பதிவு இருந்தாலும், அமிதாப் பச்சனின் போட்டோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியது.

எனினும் ஒரு சில நெட்டிசன்கள், அமிதாப் பச்சன் ஹெல்மட் அணியாமல் சாலை போக்குவரத்து வீதிகளை மீறியதாக சொல்லி தொடர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நடிகர் அமிதாப் பச்சனை போன்று நடிகை அனுஷ்கா சர்மாவும் ரசிகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் நெட்டிசன்களின் பதிவுக்கு பதிலளித்த மும்பை காவல்துறையினர் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் போக்குவரத்து காவல்துறையினர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.