கர்நாடகாவில் வெற்றி பெற்றும் அதை முழுதாக கொண்டாட முடியாத நிலையில் காங். இருக்கிறது. முதல்வர் சித்தராமையாவா. சிவக்குமாரா என இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடந்துவரும் நிலையில், முதல்வர் நான்தான் என 3வது முக்கிய நபர் போர்க்கொடி தூக்கியுள்ளார். கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவுக்கு(காங்.) முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள்போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.