வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. 2 நாட்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவி உள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் இருந்து ஊடுருவிய அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்க தவறியுள்ளனர் என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.