தேர்தலில் போட்டியில்லை என்பது வதந்தி மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர், தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே அறிவிப்பேன் என விளக்கமளித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே நமது விருப்பம் என்றும், அதற்காக சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.