வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்து குதறியதில் பராமரிப்பாளர் படுகாயமடைந்தார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7 நீர்யானைகள் உள்ளது. இவைகளை பராமரிக்க வண்டலூர் அடுத்த ஒட்டேரியை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று யானைகள் இருக்கும் இடத்தில் உள்ள புற்களை அகற்ற வேலூரில் இருந்து ஆட்கள் வந்திருந்தனர்.

இதற்காக நீர் யானைகளை ஒருங்கினைக்கும் பணியில் குமார் ஈடுபட்டார். அப்போது பெண் நீர் யானை அவரை கடித்து குதறியது. இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் சக ஊழியர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.