சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து நிலை சரியானதால் இத்தனை நாள் இயங்காமல் இருந்த பூங்கா இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது